இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால் வளர்ச்சியை காண முடியும்

இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியால் காண முடியும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.


குஜராத்தில் பாஜக அரசுகளின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை மக்களிடையே விளக்கும் வகையில், பாஜக சார்பில் குஜராத் கௌரவ்யாத்ரா எனும் பெயரில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட யாத்திரையை, நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான மறைந்த சர்தார் வல்லபபாய் படேலின் சொந்த ஊரான கரம்சத்தில் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2ஆவது கட்ட யாத்திரையை, மகாத்மாகாந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் அமித்ஷா திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:


மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, கடந்த 3 ஆண்டுகளில், குஜராத்துக்கு என்ன நல்ல காரியங்களை செய்துள்ளது என்று பாஜக.,விடம் காங்கிரஸ் கேள்விகேட்கிறது. குஜராத்துக்கு மத்திய அரசு எய்ம்ஸ் நிறுவனத்தை அளித்துள்ளது. ராஜ் கோட்டில் சர்வதேச விமான நிலையத்தை ஏற்படுத்திதந்துள்ளது. நர்மதை அணையின் நீர்மட்ட உயரத்தை உயர்த்திக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. 6 லட்சம் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகளை ஒதுக்கியுள்ளது.


இவை எதுவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தெரியவில்லை. 3 ஆண்டுகளில் குஜராத்துக்கு என்ன செய்தோம் என்று பாஜக.,விடம் அவர் தொடர்ந்துகேட்கிறார். ராகுல்காந்தி தற்போது இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை அணிந்து கொண்டுள்ளார். குஜராத்தின் வளர்ச்சியை காணும்திறன் தனக்கு வேண்டும் என்று கருதினால், ராகுல்காந்தி தாம் அணிந்துள்ள இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை கழட்டிவிடவேண்டும். பிறகு குஜராத்தயாரிப்பு கண்ணாடிகளை அணிந்து பார்த்தால், இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அவரால் காணமுடியும்.
தேர்தல்களில் வெற்றிகிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கனவுகள் கண்டுகொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், தேர்தல்களில் வெற்றிபெறுவது தொடர்பான கனவுகளை காணும் பட்சத்தில், அமெரிக்காவுக்கு சுற்றுலாவுக்கு செல்லக்கூடாது (ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தை கிண்டல்செய்தார்).


தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் எனில், அதற்கு கடினமாக பணியாற்ற வேண்டும். குஜராத் வளர்ச்சிக்காக மாநில மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும். குஜராத் மாநிலத்துக்கு 3 தலை முறைகளாகவே காங்கிரஸ் கட்சி அநீதி இழைத்துள்ளது. குஜராத்மாநில மக்கள், புத்திசாலிகள் ஆவர். அவர்கள் எப்போதும் தங்களுக்கு அநீதி இழைத்த காங்கிரஸ்கட்சிக்கு தேர்தல்களில் வாக்களிக்க மாட்டார்கள் என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...