பரவலாக பயன்படுத்தப்படும் 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியும் குறைப்பு

கடந்த ஜூலை 1-ந் தேதி, நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்க முடிவுசெய்யப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவதற்கு பான் எண், ஆதார் எண் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு உருவாக்கி இருந்தது. இந்நிலையில், இந்த கட்டுப்பாடுநீக்கப்பட்டது. அதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள், இனிமேல் பான் எண்ணை தெரிவிக்கவேண்டியது இல்லை. அவர்களைப் பற்றிய விவரங்களை நகை வியாபாரிகள், நிதிபுலனாய்வு பிரிவுக்கு அளிக்க வேண்டியதும் இல்லை.

இதுபோல், ரூ.2 கோடிக்குமேல் வர்த்தகம் செய்யும் நகை வியாபாரிகளை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையையும் மத்திய அரசு வாபஸ்பெற்றது. ஒன்றரை கோடி ரூபாய்வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என முடிவு எடுக்கப்பட்டது.

ரூ.75 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே ‘காம்போசிசன்’ திட்டத்தின் கீழ் வரிசெலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், ரூ.1 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர நிறுவனங்களும் ‘காம்போசிசன்’ திட்டத்தில் வரி செலுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தில் நடைமுறை சிக்கல் இல்லாமல், 1 முதல் 5 சதவீத வரி மட்டும் செலுத்தினால்போதும். பரவலாக பயன்படுத்தப்படும் 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியும் குறைக்கப்பட்டதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...