தமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி உள்ளது

தமிழகத்தில் டெங்குவால் அசாதாரண சூழ்நிலை உருவாகிஉள்ளது, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநிலத்  தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது.

இளைஞர்களின்  ஆதரவோடு அரசியல் அங்கீகாரம்பெற்று வருகிறது. பாஜ வலியுறுத்தலின் பேரிலேயே தமிழகத்தில் டெங்குகாய்ச்சல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் கீழ் கொண்டு  வரப்பட்டது. தமிழக அரசு டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்திய அரசிடம் எதுவும்  கேட்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. தமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிஉள்ளது. ஆனால், இதில்  தனியார் மருத்துவமனை, சமூக ஆர்வலர்கள் பங்களிப்புஇல்லை.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக் குறியாக உள்ளது. முதல்வருக்கு உட்கட்சி பிரச்னையால், மக்கள்பிரச்னை மீது கவன சிதறல் ஏற்படுகிறது. எனவே, முதல்வர் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மேற்ப்பார்வையிட்டு மக்கள்பக்கம் கவனத்தை திருப்பவேண்டும். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிபேசுவதை முதல்வர்  கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...