எலி 12 டாலர்கள், அதற்குரிய கதை 100டாலர்கள்

ஒரு இந்திய சுற்றுலா பயணி
சான்ஃப்ரான்சிஸ்கோ-வில் ஷாப்பிங்க் சென்றான்.
அங்குள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெண்கலத்தினால் செய்ய்யப்பட்டிருந்த எலி அவனை மிக மிக கவர்ந்தது.

அதனை வாங்கும் நோக்கத்துடன் எடுத்துப் பார்த்தபோது,

அதன் மீது மட்டும் price tag இல்லை.

கடைக்காரரிடம் அதன் விலை கேட்டபோது
அவர், "எலி 12 டாலர்கள், அதற்குரிய கதை 100டாலர்கள்", என்றார்.

12 டாலர்களைக் கொடுத்து," எனக்கு இந்த எலி மட்டும் போதும்!
கதை வேண்டாம்" என சொல்லி விட்டு எலியை எடுத்துச் சென்றான்.

சற்று தூரம் சென்ற பின்,
தன் பின்னால் சில நிஜ எலிகள் வருவதைப் பார்த்தான்.
கலக்கத்துடன் சற்று வேகமாகச் சென்றான்.
மேலும் இன்னும் பல எலிகள் தொடர்ந்தன….

இன்னும் மிக வேகமாகச் சென்றான்….
சற்று நேரத்துக்குள்,
நூறாகி……..
ஆயிரக்கணக்காகி……
லட்சக்கணக்கில்……………அவனைத் தொடர்ந்தன

இதனைக் கண்டு பயந்து நடுங்கி….ஓடஆரம்பித்தான்…..
கடலை நோக்கி ஓடிப்போய்……
கையிலிருந்த வெண்கல எலியைத் தூக்கி
கடலுக்குள் வீசி எறிந்து விட்டான்…

என்ன ஆச்சர்யம்?!…
அனைத்து எலிகளும் கடலுக்குள் சென்று விழுந்து விட்டன….

இதனைக் கண்டு மிகுந்த நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு
வெண்கல எலியை வாங்கிய கடைக்குச் சென்றான்.

இப்போது அவனைக் கண்ட அந்த கடைக் காரர்..
.."என்ன …இப்போது கதை வேண்டுமா?", என நக்கலாகக் கேட்டார்.

அதற்கு அந்த சுற்றுலா பயணி, என்ன பதில் கூறியிருப்பார்?…..

சற்று நீங்கள் யோசித்து பாருங்கள்……
..
..
..
..
..
..
..
….
..
..
..
..
..
..
"இல்லை…..இல்லை"



..
..
.
அந்த வெண்கல எலி சிலையைப் போல்……இப்போதுள்ள இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் (மோசமாக ஊழல்கள் செய்து வந்துள்ளவரின்) பெயரைக் குறிப்பிட்டு, அவரின் சிலை இருக்கின்றதாவெனக் கடைக்காரரிடம் கேட்டான்!..…..

நன்றி  திருநாவுக்கரர்சு     திருச்செங்கோடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...