மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி :

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனைகாக்க பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில்   உதவிவருகிறார்.

இந்நிலையில், நசீம் அக்தர் என்ற பாகிஸ்தான் பெண்ணின் மகன், தனதுதாய் இந்தியாவில் சிகிச்சை பெற விசா வழங்க உதவிசெய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், ஷபீர் அகமதுஷா என்பவரின்மகன் அலி அசதுல்லாவும், தனதுதந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி கேட்டிருந்தார். இருவரும் இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வதற்காக விசா கேட்டிருந்தனர்.

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், ‘‘உங்கள்தாய்க்கு விசா வழங்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அறிவுறுத்திஇருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், “உங்கள் (அலி அசதுல்லா) தந்தையின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு விசாவழங்க இந்திய தூதரகத்திடம் கூறியிருக்கிறோம். நீங்கள் அங்குஅணுகவும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத்தைசேர்ந்த எம்.மொசீன் என்பவர், தனதுஉறவினர் பர்சானா இஜாஸ் என்பவர் மிகவும் கவலைக் கிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய விசா வழங்க உதவவேண்டும் என்று சுஷ்மாவுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைபார்த்த சுஷ்மா ஸ்வராஜ், பர்சானாவுக்கு மருத்துவவிசா வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...