போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்

அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்து களை வெளி யிட்டிருந்தார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ‘மெர்சல்’ மூலம் நடிகர் விஜய் யும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து களை வெளியிடத் தொடங்கி விட்டார்.

அந்தத் திரைப் படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பற்றியும் கேலி செய்து வசனம் பேசி யுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித் திருந்த நிலையில், தற்போது மெர்சல் திரைப் படத்திலும் எதிர்ப்பு வசனங்களை வைத் திருப்பது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. மத்திய அரசு மீதான விஜய் யின் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பி.ஜே.பி தரப்பில் கண்டனக் குரல்கள் எழுந் துள்ளன. இது குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசிய போது, ‘விஜய் நடித்துள்ள மெர்சல் திரை ப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் பதிவு செய்திருப்பது கண்டனத் துக்குரியது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் உண்மைத் தன்மையை மறைத்து மக்கள் மனதில் மாற்றுக் கருத்துகளைப் பதிய வைக்கக் கூடாது.

போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது. அவ்வாறு நீங்கள் சொல்கிற அனைத்துக் கருத்தையும் ஏற்றுக் கொண்டு பி.ஜே.பி அமைதி காக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இவர்கள் ஒன்றும் நேற்றோ, இன்றோ அறிமுக மானவர்கள் அல்ல. 50 ஆண்டு காலமாகக் களத்தில் இருக்கக் கூடியவர்கள். பல ஊழல் களையும் மிகப் பெரிய மக்கள் பிரச்னை களையும் இந்த நாடு சந்தித் துள்ளது. அப்போது எல்லாம் கருத்துச் சொல்லாத வர்கள். தற்போது பி.ஜே.பி-யைக் குறை சொல்லி விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள். அதுதான் உண்மை. மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி செய்வது போன்ற தொரு நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படித் தவறான கருத்து களை மக்கள் மனதில் பதிவு செய்வதற்கு பி.ஜே.பி என்றும் அனுமதிக்காது” என்றார்

‘விஸ்வரூபம்’ படத்தில் கருத்துச் சுதந்திர த்துக்கு உரிமை யில்லையா? சோனியா காந்தி குறித்து தவறான கருத்தை வெளியிட் டார்கள் என்ப தற்காக காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டம் நடத்த வில்லையா? இதில் எல்லாம் எங்கே போனது கருத்துச் சுதந்திரம்?

இந்த நாட்டை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்ப தற்காக திட்டங் களைச் செயல் படுத்தும் போது தவறான கருத்து களைச் சொல்லி அந்தத் திட்டத்தைச் சிதைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.’’இவ்வாறு அவர் கூறினார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...