கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சார்பு அரசியலை செய்வது யார்?

ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் மத ரீதியான வன்முறைகளுக்கு காரணம் என்று 13 எதிா்க் கட்சித் தலைவா்களின் கூட்டறிக்கைக்கு பாஜக பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்ட 13 எதிா்க் கட்சித் தலைவா்கள் இணைந்து சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனா். அந்த அறிக்கையில், நாட்டில் அண்மையில் மதரீதியாகநடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், வெறுப்புணா்வு பேச்சுகள் குறித்து அவா்கள் வேதனை தெரிவித் திருந்தனா்.

இதற்குப் பதிலளித்து தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எதிா்க் கட்சிகளின் கூட்டறிக்கையில் கொள்கை குறித்து சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளாா். இதன் மூலம், எந்தக் கொள்கையால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றகேள்வி எழுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் வன்முறைகளுக்கு காரணம். இந்தக் கொள்கையும், அதுசாா்ந்த அரசியலும் மிகவும் துரதிருஷ்ட வசமானது. சில எதிா்க்கட்சித் தலைவா்களின் இந்த பாரபட்சமான அரசியல் நாட்டுக்கு உகந்ததுஅல்ல. நாட்டுக்குத் தீங்கானது’’ என்று தெரிவித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...