சர்தார் வல்லபாய் படேலின் தேசபக்தி

ஒருமுறை சர்தார் வல்லபாய் படேல், ஒரு பிரெஞ்சுக்காரனையும் ஓர் ஆங்கிலேயனையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் வல்லபாய் படேல் ஓர் இந்தியர் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். பிறகு அவர்கள் தங்கள் நாட்டில் பெருமைகளை ஒரேயடியாக அளந்து விட்டார்கள்.

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபாய் படேல், எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அதனால்

வெட்கமடைந்த அவர்கள் வேறு மாதிரியாக பேச ஆரம்பித்தார்கள்.

பிரெஞ்சுக்காரன், "நான் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயம் ஆங்கிலேயனாகப் பிறந்திருப்பேன்" என்றான். ஆங்கிலேயன், "நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்காவிட்டால் பிரெஞ்சுக்காரனாகத்தான் பிறந்திருப்பேன்" என்றான்.

அப்போதும் பேசாமல் இருந்தார் வல்லபாய் படேல், அதைப் பார்த்து எரிச்சலடைந்த பிரெஞ்சுக்காரன், "நாங்கள் இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே! என்றான்.

"பேசத்தானே வேண்டும்? பேசுகிறேன். ஒரு வேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்காவிட்டால் அதற்காக வெட்கித் தலைகுனிந்திருப்பேன்" என்று கூறி அவர்கள் வாயை அடைத்ததோடு, தன் நாட்டுப் பற்றையும் படேல் கம்பீரமாக வெளிப்படுத்தினார்.

– நெ. ராமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...