ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது

ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பாஜக வடசென்னை மாவட்டநிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஒருகாலத்தில் பாஜக என்றால் எங்கே இருக்கிறது என்று கேலிசெய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அதிமுக, திமுக, காங்கிரஸ்,இடது சாரிகள் என எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜகவை தவிர்த்துவிட்டு அரசியல் நடத்தமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த தலைவராக இருந்தாலும் பாஜக என்ற பெயரை உச்சரிக்காமல் அவர்களால் பேசமுடிவதில்லை.

பாஜகவை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கேலிபேசலாம், அவதூறு பரப்பலாம், எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்றநிலை இருந்தது. இனியும் இப்படியே இருப்போம் என நினைக்க வேண்டாம். எங்களை விமர்சித்தால் அதற்குபதில் விமர்சனம் வைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார். அதற்கு பதிலாக நான் சிலவிமர்சனங்களை முன்வைத்தேன். உடனடியாக சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி ஆபாசமாக, மிக மோசமாக விமர்சித்து வருகிறார்கள். நள்ளிரவில் எனது வீட்டின் முன்பு திரண்டு எனது உருவபொம்மையை கொளுத்துகிறார்கள். பாஜக நிகழ்ச்சிநடைபெறும் இடங்களுக்கு வந்து வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

இதை எதிர்கொள்ள தற்காப்புக்காக பாஜகவினர் சிலநடவடிக்கைகளை மேற்கொண்டால் வன்முறையை தூண்டுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களுடன் மோதநினைத்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது. இதுகுறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...