மலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி இருப்பதால், அதைபயன்படுத்த வேண்டும்

மலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி இருப்பதால், அதைபயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கைதான் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல்குவாரிகளும் மூடப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்புகுழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணைநிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இயற்கை வளங்களை ‌பாதுகாக்கவும், மணல் கொள்ளையை ‌தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆற்றுமணலுக்கு மாற்று என்ன என்பதை அரசு யோசித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் எந்ததீர்ப்பாக இருந்தாலும், அது கட்டுமான பணியையோ, மற்ற தொழில்களையோ, தொழிலாளர் களையோ, நாட்டின் முன்னேற்றத்தையோ பாதிக்கக் கூடாது என்பதில் அனைவருமே குறியாக இருக்கவேண்டும். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகிக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்தது. அதனால் அந்த மணலை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கைதான்” என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...