காங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்

மூத்த அரசியல் தலைவர் வகேலா காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகியது குஜராத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மத்திய குஜராத் பகுதியில் குறைந்தது 40 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத்சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.


பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 


மத்திய குஜராத்தைப் பொருத்தவரை 61 தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ் – பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றும் கூறப் படுகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வகேலாவுக்கு மத்திய குஜராத்தில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்தமுடிவை எடுத்தார்.


இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 'வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்' என்றார். மேலும், மத்திய குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...