அனைத்து மக்களுக்கான மிக அருமையான பட்ஜெட்

இது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான மிக அருமையான வரவு செலவு திட்டம். ஏற்கனவே திட்டமிட்டப்படி அனைவருக்கும் 2022க்குள் வீடுவழங்கும் திட்டம் வெற்றிகரமாக அமைய முக்கியத்தும் அளிக்கப்பட்டது.


நாட்டு மக்கள் தம்முடைய மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ளவே, தாம் அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தங்க நகைகளை அடமான வைக்கவோ அல்லது விற்கவோ இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏறகுறைய 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதியதொரு புரட்சிகரமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் பெறும் வகையில் அறிவித்துள்ளது.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஏழைகளின் சுகாதாரத்தில் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு எவ்வளவு அக்கரை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்துவதாக உள்ளது.


125 கோடி மக்கள்; வாழும் நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்பதை கவனித்த பாரத பிரதமர் அவர்கள் 3 பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ ஆராட்சி கல்லூரி உடனே தொடங்க இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்தது மிக மிக பாராட்டுக்குரியது.


ஒரு பூமாலை அழகானது என்று சொல்ல வேண்டும் என்றால் அதில் ஒவ்வொரு பூக்களும் நல்லவைகளாக இருக்க வேண்டும்.  அதுபோல நமது நாடு முழுமையான வளர்ச்சி அடைந்து உலகிற்கே வழிகாட்ட கூடிய குருவாக அமைய வேண்டும் என்ற சீரிய நோக்கில் ஏழை, எளிய மக்கள், உழைப்பாளிகள் விவசாயிகள் மீனவர்கள் மாணவர்கள், பெண்கள், மூத்தகுடி மக்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களையும் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பு கவனம் செலுத்திய வளர்ச்சிக்கான வரவு செலவு திட்டம் தேர்தல் காலத்தில் வழங்கிய வரவு செலவு திட்டமாக இருந்தாலும், வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலனே தலையாயது என்பதை மனதில் வைத்து இந்த வரவு செலவு திட்டத்தை வழங்கிய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி, அவர்களையும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், தமிழக மக்களின் சார்பில் மனதார தமிழக பாரதிய ஜனதா கட்சி வாழ்த்துகிறது.


Dr. தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...