தமிழ்மொழி மிக அழகானது. சமஸ்கிருதத்தை விட மிகவும் தொன்மையானது

நான், உங்கள் மத்தியில், நாட்டின் பிரதமராக பேசவரவில்லை. உங்களில் ஒருவனாய், ஒரு மாணவனாய் உரையாற்றுவதில் பெருமைகொள்கிறேன். என்னை, இன்றும் ஒருமாணவனாக உணரச்செய்த, என் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.பெற்றோர், தங்கள் கனவுகளை, குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களுக்கு எது பிடிக்கிறது; எதில் அவர்கள் நாட்டம்செல்கிறது என்பதை கூர்ந்து கவனித்து, அதன்படி செயல்பட வேண்டும்.

அவர்களை சரியான பாதையில் வழி நடத்துவது மட்டுமே, பெற்றோரின் கடமை.மாணவர்கள், தேர்வைகண்டு அஞ்ச தேவையில்லை. அதை, தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நினைவாற்றல், தன்னம் பிக்கையை வளர்த்துக் கொண்டால், எந்ததேர்விலும் சாதிப்பது சாத்தியமே. தன்னம்பிக்கை என்பது, மருந்து, மாத்திரைகளால் வருவதல்ல.

அது, நமக்குள் பிறக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என் பள்ளிபருவத்தில், சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை அதிகம் படித்துள்ளேன்.அதில் மிகச்சிறந்த ஒரு வாசகம், 'உனக்கு எவ்வளவு தான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், தன்னம்பிக்கை இல்லா விட்டால், எதையும் சாதிக்க முடியாது' என்பதே அது.

எந்தவொரு விஷயத்தையும், அறிவுக்கூர்மை யுடனும், உணர்வுபூர்வமாகவும் அணுகவேண்டும். நம் குழந்தைகள், பிறப்பிலேயே அரசியல்வாதிகள். தங்களின் வேலையை, தங்களுக்கு தேவையானதை எப்படி முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை, அவர்கள் நன்கு அறிவர்.

தேர்வை ஒருவிழாவாக எண்ணி கொண்டாடவேண்டும். கவலைப்படுவதை விடுத்து, மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும், ஒரு போர் வீரனைப்போல், தேர்வை அணுக வேண்டும். நம்பிக்கை, துணிச்சல், மகிழ்ச்சியுடன்தேர்வை சந்தித்தால், நீங்கள் சாதிப்பது நிச்சயம்.

 

பல மொழி பேசும் மாணவர்கள் மத்தியில்,அவர்களின் மொழியில்பேச முடியாததை எண்ணி வருந்துகிறேன். உதாரணத்திற்கு, தமிழ்மொழி மிக அழகானது. சமஸ்கிருதத்தை விட மிகவும் தொன்மையானது. அந்த மொழியில், 'வணக்கம்' என்ற வார்த்தையை தவிர, வேறு எதுவும் தெரியாது என்பது, எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

டில்லியில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஆயிரக் கணக்கான மாணவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.