மோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்

ஏன் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது. தெரிந்து கொள்வோம்

சந்திரபாபு நாயுடு ஏன் கோபித்துக்கொண்டார்? உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா? அவர்கள் கேட்க்கும் special category status (சிறப்பு அந்தஸ்து)என்றால் என்ன?

கொஞ்சம் வரலாற்றை பார்த்துவிட்டு நிகழ்காலத்துக்கு வருவோம்.. 2014 ல் ஆந்திரா தெலங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டபொழுது , அப்போதைய ஆந்திரா தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து 10 ஆண்டுகளுக்கு வழங்கவேண்டும்.. ஐதராபாத் எங்கள் மாநிலத்தை விட்டு போவதால் , எங்களுக்கு பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்றது.. அன்று ராஜ்ய சபையில் மன்மோகன் சிங்க் இந்த தீர்மானத்தை படித்தபொழுது, வாய்வழியாக 5 ஆண்டுகளுக்கு தருகிறோம் என்று ஒப்புக்கொண்டார்.. அதுதான் இப்பொழுது பிரச்சனை

சரி.. இந்த சிறப்பு அந்தஸ்து கொடுப்பதனால் அவர்களுக்கு என்ன லாபம்? ஏன் மத்திய அரசு இப்பொழுது அதை கொடுக்க மறுக்கிறது?

1 சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் , மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 % நிதியை பெரும்.. 10 % ஐ மத்திய அரசிடமிருந்து கடனாக பெற்றுக்கொள்ளலாம்.. மற்ற மாநிலங்கள் வெறும் 60 % மட்டுமே பெரும்.. 40 % கைக்காசை போட வேண்டும்

2 மத்திய அரசு விதிக்கும் வரியில் (வர்த்தகத்திற்கு) சிறப்பு சலுகை அந்த மாநிலத்துக்கு கிடைக்கும்

3 மத்திய அரசின் பட்ஜெட்டில் 30 % ஐ இந்த மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும்

4 மத்திய அரசின் நிதியில் இவர்களுக்கே முன்னுரிமை

5 மாநிலத்தின் கடனில் ஒரு பகுதியை மத்திய அரசின் தலையில் கட்டிவிடலாம்

இதுபோன்ற பல விஷயங்கள் இந்த சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு கிடைக்கிறது.. இது போன்று முன்னறய காலங்களில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மற்ற சில மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.. கடைசீயாக ஜார்கண்டுக்கு 2010 ல் கொடுக்கப்பட்டது.. இவையெல்லாம் மிகவும் பொருளாதாரத்தில், கட்டுமானத்தில், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள்..

சரி, அப்பொழுது ஏன் ஆந்திராவுக்கு மட்டும் கொடுக்காமல் கழுத்தறுக்கிறது மத்திய அரசு என்று கேட்கலாம்.. அங்கேதான் சிக்கல் இருக்கிறது.. 2014 ன் ஆரம்பத்தில் 14th பைனான்ஸ் கமிஷன் அமைக்கப்பட்டது (இது காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுத்த அதிகாரிகளால் அமைக்கப்பட்ட கமிஷன்).. எல்லா அரசும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என இந்த பைனான்ஸ் கமிஷன்களின் பரிந்துரைகளைப்படிதான் செயல்படும்.. அப்படி இந்த 14 வது பைனான்ஸ் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றானது, இனி எந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது, அதற்க்கு பதிலாக , தேவைப்படும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கலாம் என்று அறிவித்தது.. அதை 2015 ல் மோடி அரசு ஏற்றுக்கொண்டது.. இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது , இதை ஏற்றுக்கொண்டபொழுது அந்த அரசின் அங்கமாக இருந்துகொண்டு வாய்மூடி பேசாமல் இருந்தவர் சந்திரபாபு நாயுடு.. '''

அப்பொழுதே அவர் இந்த பரிந்துரையை ஏற்றால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியே போவோம் என்று சொல்லி இருக்கலாம்.. ஆனால் இப்பொழுது அவர் கத்தி கூப்பாடு போடுவது வேறேதோ காரணத்திற்க்காக.. ஏனென்றால் மோடி அரசு தெளிவாக சொல்லிவிட்டது, சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக, அதே அளவு உங்களுக்கு சிறப்பு நிதியை வழங்குகிறோம்.. நாயுடுகாரு அந்த நிதியை பெற அவரிடம் இருக்கும் திட்டங்களை சமர்ப்பிக்கவேண்டும்.. அதை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.. இதுவரை அவர்கள் அமராவதி நகரம் கட்ட கொடுத்த 2500 கோடியும் இன்னும் செலவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.. அப்படி இருக்கையில் எப்படி மத்திய அரசு அவ்வளவு பெரிய தொகையை தூக்கி கொடுக்கும்?

நம் டுமிலர்கள் , நாயுடுகாரு மோடியை எதிர்ப்பதனாலேயே அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாடுகிறார்கள்.. ஆனால் விஷயம் என்னவென்றால், நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இங்கே எல்லா தொழில் நிறுவனங்களும் கடையை சாத்திவிட்டு ஆந்திராவிற்கு சென்றுவிடும்..ஏனென்றால் அவர்களுக்கு வரி விடுமுறை, மத்திய அரசு வரிச்சலுகை என அள்ளிக்கொடுக்கப்படும்.. நாம் இங்கே வாயில் விரலைபோட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.. அதனால்தான் ஜெயலலிதா ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்தார்..மோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்… அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய இந்த மூடர்கள் கூட்டம், அவரை திட்டிக்கொண்டு திரிகிறது, நாய்டுவை புகழ்கிறேன் என்று..

நன்றி; ஹரிதாசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...