நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம்.

அம்பேத்கர் வழியில் அரசுநடக்கிறது. நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் என்று தில்லியில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார். 

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில்விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடைவிதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்ததீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே தலித் விரோத போக்கை கையாண்டு வருவதாகவும், தலித் விரோதப் போக்கு பாஜகவின் ரத்தத்தில் கலந்தது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதையடுத்து இன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். அந்தவகையில் ஏழைகளுக்காக இந்த அரசு பணியாற்றுகிறது.

மேலும் முன்னாள் வாஜ்பாய் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசாங்கமே அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம்காண ஆரம்பித்தது, இந்தியாவின் அரசியலமைப் சட்டத்தை உருவாக்கிய அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைகொள்கிறோம். 

எங்களை போல வேறு எந்த அரசும் அம்பேத்கரை இந்தளவிற்கு கெளரவிக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவை மிகமுக்கியமானது என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...