தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்

தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல பலதிட்டங்களை தடுப்பதற்கு என்றே தமிழ் உணர்வு என்ற போர்வையில் ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் குறிபிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

துரோகத்தை மறைக்கவே பிரதமருக்கு எதிராக தமிழகரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். சமீபத்திய போராட்டம் கண்டிக்கத் தக்கது. பொய்யைசொல்லி திமுக ஆட்சிசெய்து வந்தது. தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். சாதி, மதரீதியாக ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு மீண்டும் ஆட்சிக்குவர துடிக்கின்றனர்.


தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள். யார்கெட்டாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என சில அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. ஆனால் நாங்கள் நாடுநல்லா இருக்கனும் என நினைக்கிறோம்.தமிழ் உணர்வுகள் இருப்பதாக சொல்லிக் கொண்டு சிலர் பேசும்வார்த்தைகள், தமிழனை அவமானப் படுத்துவதாக உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்கவந்த பெண்களை சிலர் கொச்சையாக பேசி இருக்கின்றனர். எனது சகோதரியை, எனது தாயை இழிவாக பேசுவதற்கு யார் அதிகாரம்கொடுத்தது? தமிழ் உணர்வு என்ற போர்வையில் சிலர் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

காவிரியில் நமது உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும். நிரந்தர தீர்வுகிடைக்கும் வகையில் வர வேண்டும். பிரதமர் மோடி புதிதாக திட்டமிடும் கோதாவரியில் இருந்து வரும்நீரை தாமிரபரணி வரை கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 3 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறதே யாராவது இதனைபெற 50 ஆண்டுகள் முயற்சி செய்தார்களா ? தமிழ் உணர்வு என மக்களை ஏமாற்றும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகிறது.

தமிழர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த பலர் முயற்சிசெய்கின்றனர். தமிழ் சமுதாயத்தை பிரிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும். மோடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதில் கிறிஸ்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரகூடாது என ஒரு கூட்டம் செயல்படுகிறது.


தமிழக அரசு வேடிக்கைபார்த்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பல உருவங்களாக வளர்ந்துவருகின்றனர். பலர் பல அமைப்புகளில் பயங்கரவாத அதாவது தேசவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை பயிற்சிகளமாக மாற்றி வருகின்றனர். 28 ஆயிரம்கோடி செலவில் துறைமுகம் கட்டுவதற்கு எதிர்ப்புதெரிவிக்க யார் அவர்கள் ? எல்லோரும் ஆதரவுகொடுத்து தற்போது வேண்டாம் என கூறுவதற்கு காரணம் என்ன ? இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...