இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை

'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரிபகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ஆய்வுமேற்கொண்டார். பின்னர், இறச்சகுளத்தை அடுத்த அம்பளம்துருத்தியில் பட்டியலின மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ''மனிதர்களில் யாரும் தாழ்ந்த வரும் இல்லை, யாரும் உயர்ந்தவரும் இல்லை; அனைவரும்சமம் என்ற மாமனிதர், அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக அனைத்து தலைவர்களும் தேர்வு செய்த ஒரே தலைவர் அம்பேத்கர்தான். இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி யிருக்கிறார். லண்டனில் அம்பேத்கர் பயின்ற கல்விநிலையத்தில் பட்டியலின மாணவர்களைப் படிக்கவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்டியலின மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக, மாதம் 25,000 ரூபாய் வழங்க மோடி தலைமை யிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...