இந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை

இந்தியமுஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத் கூறியதாவது:–-

ராமர் கோவிலை இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடிக்க வில்லை. இந்தியர்கள் ஒரு போதும் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டார்கள். இந்தியாவை பலவீனப்படுத்த வெளிநாட்டு சக்திகள் கோவிலை இடித்தனர். எனவே, ராமர் கோவிலை மீண்டும் அதேஇடத்தில் கட்டுவது என்பது தேசியபொறுப்பு ஆகும். ராமர்கோவிலை கட்ட நாங்கள் எந்த போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். ராமர்கோவில் மீண்டும் கட்டப் படவில்லையென்றால், நமது கலாச்சாரம் வேரோடு துண்டாகும் நிலை ஏற்படக் கூடும்.

எது இடிக்கப் பட்டாலும் மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. ஏனெனில், இதுவெறும் கோவில் மட்டும் இல்லை. நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்றார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவிலை கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. இந்தவழக்கில், உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...