நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்’

`காவி, இந்துத்துவ பயங்கரவாதம் என்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி நாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா.

கர்நாடக மாநிலச் சட்டமன்றத்துக்கு அடுத்தமாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. `இந்தத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்' என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள், கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். தேர்தல்பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டிவரும் அமித்ஷா, கர்நாடகாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவர், “காவி மற்றும் இந்துத்துவா பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளை, காங்கிரஸ் தலைவர்கள்தான் பேசிவந்தனர். இப்படிப் பேசியே நாட்டை அவர்கள் அவமதித்தும் வந்தார்கள். அக்கட்சியின் தலைவர் ராகுல் `பயங்கர வாதத்துக்கு எந்தமதமும் கிடையாது' என்றார். பின்னர், `நாங்கள் அதுபோன்ற வார்த்தைகளைப் பயன் படுத்தவே இல்லை' எனக் கூறிவிட்டனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட பலகாங்கிரஸ் தலைவர்கள் இந்த வார்த்தையை பயன் படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, `நாடாளுமன்றத்தில் இரு எம்.பி-க்களை மட்டுமே பா.ஜ.க வைத்துள்ளது' எனப் பேசியிருந்தார். இன்று நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையாக அமர்ந்திருக்கிறோம். அதேபோல், நாடுமுழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-களை வைத்திருக்கிறோம். 20 மாநிலங்களில் எங்கள் ஆட்சிதான் நடந்துவருகிறது’’ என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...