பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்

அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடுமுழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மைபணி நடந்தது. வடசேரி காந்தி பார்க்கில் மத்தியமத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன் மண்வெட்டி மூலம் குப்பைகளை சேகரித்தார். பின்னர் கைகளால் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினார்.

 

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

 

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த முயற்சித்து செல்போனில் பேசியது முதல்முறை போன்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக இதுபோன்று அவர் ஈடுபட்டு வந்திருக்கலாம் என நினைக்கிறேன். எனவே இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். இது போன்று அந்த ஒருகல்லூரியில் மட்டும்தான் நடந்ததா? அல்லது வேறு கல்லூரி மாணவிகளுக்கும், வேறு பெண்களுக்கும் இதுபோன்ற தொல்லை நடந்திருக்கிறதா? என்பதையும் ஆய்வுசெய்வது அவசியம். மாணவிகளை பாலியலில் ஈடுபட முயற்சித்த கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரை உடனே பணி நீக்கம்செய்ய வேண்டும்.

 

காவிரி பிரச்சினை சுமார் 100 ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால் தற்போது வெறும் 100 நாட்களில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால் எப்படி முடியும்? காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த பிரச்சினையையும் உருவாக்கியதே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். ஆனால் தற்போது அவர்கள் தீர்வு கேட்டும் போராடுகிறார்கள்.

 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கேட்க மாட்டோம், பிரதமர் நரேந்திர மோடி கூறுவதையும் கேட்கமாட்டோம் என்று சொல்லக்கூடிய அரசு, கர்நாடகாவில் இருந்து அகற்றப்படவேண்டும். எனவே கர்நாடகாவில் வருகிற சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். பா.ஜனதா வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு நன்மை நடக்கும்.

 

சமூக வலை தளங்களுக்குள் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஊடுருவி எந்த தலைவர்களாக இருந்தாலும் கொச்சைப் படுத்தி கருத்து வெளியிடுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதற் காகவே அவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங் களுக்குள் ஊடுருவுவதை தடுப்பது அவசியம்.

 

கவர்னர் பன்வாரிலால் புரோகித் மிகவும் திறமையாக செயல்பட்டுவருகிறார். ஆனால் அவரை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் முயற்சிக் கிறார்கள். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...