பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க அனுமதி

பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க ப.ஜா.ஜ், டி.வி.எஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். குறிப்பாக கோதுமை வைக்கோல் போன்ற வற்றிலிருந்து தயாரிக்கப்படும் பயோ எத்தனால் மூலம் 100 சதவீதம் இயங்கும் வாகனங்களை உருவாக்க இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி மேலும் கூறியதாவது,

பயோ எத்தனாலில் இயங்கும் மோட்டார்சைக்கிள், ஆட்டோ ரிக்‌ஷாக்களை தயாரிக்க பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். 100 சதவீதம் பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங்களை உருவாக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அவர்களும் தயாரிக்க உள்ளனர்.

பயோ எரிபொருட்களை தயாரிக்கும் விதமான முயற்சிகளை விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி இருப்பதை குறைக்கமுடியும்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வைக்கோல் வீணாக எரிக்கப்படுகிறது. இதன்மூலம் புதுடெல்லி பிராந்தியத்தில் காற்று மாசும் உருவாகிறது. ஒருடன் வைக்கோலில் இருந்து 280 லிட்டர் எத்தனால் உற்பத்தியாகும் என்றும் கூறினார்.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மரம் இறக்குமதி செய்யப் படுகிறது. ரூ.4,000 கோடிக்கு ஊதுபத்திக்கான குச்சிகளும், ரூ.35,000 கோடிக்கு காகிதகூழ், ரூ.35,000 கோடிக்கு காகிதமும் இறக்குமதி செய்யப்படுகிறது. மரம் சார்ந்தவற்றின் இறக்குமதி மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசு மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இதனால் இறக்குமதியை குறைக்கலாம்.

முதல் முறையாக மூங்கிலை மரவகைகளில் வகைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...