பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளனர்

பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளதாக மும்பையில் நடந்த விழாவில், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிசார்பில் மராட்டிய சட்டமேலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நிரஞ்சன் தவ்காரே. இவர் மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் வசந்த்தவ்காரேயின் மகன் ஆவார். இவரது பதவிகாலம் முடிய ஒரு மாதம் இருந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவர் தனதுபதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் நேற்று நடந்த விழாவில் நிரஞ்சன் தவ்காரே, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

வசந்த் தவ்காரே எல்லோருக்கும் தெரிந்தவர், பலஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். அவரதுமகன் நிரஞ்சன் தவ்காரே கடந்த பலநாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் தேசியகட்சியில் இணைய விரும்பினார். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நாங்களும் விரும்பினோம். 30 ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதா சிறியகட்சியாக இருந்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து தற்போது பா.ஜனதா மிகப் பெரிய கட்சியாகி உள்ளது.

பா.ஜனதாவில் இணைய மேலும் பலர் வரிசையில் உள்ளனர். அவர்களின் பெயர் தேவைப்படும்போது வெளியிடப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

 

பா.ஜனதாவில் இணைந்தபிறகு பேசிய நிரஞ்சன் தவ்காரே கூறுகையில், ‘சரத்பவார் மிக ப்பெரிய தலைவர் என்றாலும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களில் நம்பிக்கை ஏற்பட்டு பா.ஜனதாவில் இணைந்தேன்’ என்றார்.

இந்தவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...