பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளனர்

பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளதாக மும்பையில் நடந்த விழாவில், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிசார்பில் மராட்டிய சட்டமேலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நிரஞ்சன் தவ்காரே. இவர் மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் வசந்த்தவ்காரேயின் மகன் ஆவார். இவரது பதவிகாலம் முடிய ஒரு மாதம் இருந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவர் தனதுபதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் நேற்று நடந்த விழாவில் நிரஞ்சன் தவ்காரே, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

வசந்த் தவ்காரே எல்லோருக்கும் தெரிந்தவர், பலஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். அவரதுமகன் நிரஞ்சன் தவ்காரே கடந்த பலநாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் தேசியகட்சியில் இணைய விரும்பினார். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நாங்களும் விரும்பினோம். 30 ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதா சிறியகட்சியாக இருந்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து தற்போது பா.ஜனதா மிகப் பெரிய கட்சியாகி உள்ளது.

பா.ஜனதாவில் இணைய மேலும் பலர் வரிசையில் உள்ளனர். அவர்களின் பெயர் தேவைப்படும்போது வெளியிடப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

 

பா.ஜனதாவில் இணைந்தபிறகு பேசிய நிரஞ்சன் தவ்காரே கூறுகையில், ‘சரத்பவார் மிக ப்பெரிய தலைவர் என்றாலும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களில் நம்பிக்கை ஏற்பட்டு பா.ஜனதாவில் இணைந்தேன்’ என்றார்.

இந்தவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...