புஸ்வானமும் இல்லை… வெடிகுண்டும் இல்லை… ஊசிவெடிதான்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு ஊசி வெடிபோல் வெடித்து விட்டது என் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தவழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம்செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்ததீர்ப்பு குறித்து இன்று காலையில் கருத்து தெரிவித்திருந்த தமிழிசை சவுந்தரராஜன், 18 எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்க போகிறதா? புஸ்வானமாக போகப் போகிறதா? என்பது தீர்ப்பின் முடிவில் தெரியும் என்று தெரிவித்திருந்தார். தற்போது தீர்ப்புவெளியான பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ இன்று வெளியான தீர்ப்பு புஸ்வானமும் இல்லை. வெடிகுண்டும் இல்லை. தீர்ப்பு ஊசி வெடி போல் வெடித்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் யாருக்கும் பாதகமும் இல்லை. சாதகமும் இல்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கவேண்டும். தற்போது சூழலில் அதிமுகதான் பெரும்பான்மையான அரசு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...