புஸ்வானமும் இல்லை… வெடிகுண்டும் இல்லை… ஊசிவெடிதான்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு ஊசி வெடிபோல் வெடித்து விட்டது என் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தவழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம்செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்ததீர்ப்பு குறித்து இன்று காலையில் கருத்து தெரிவித்திருந்த தமிழிசை சவுந்தரராஜன், 18 எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்க போகிறதா? புஸ்வானமாக போகப் போகிறதா? என்பது தீர்ப்பின் முடிவில் தெரியும் என்று தெரிவித்திருந்தார். தற்போது தீர்ப்புவெளியான பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ இன்று வெளியான தீர்ப்பு புஸ்வானமும் இல்லை. வெடிகுண்டும் இல்லை. தீர்ப்பு ஊசி வெடி போல் வெடித்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் யாருக்கும் பாதகமும் இல்லை. சாதகமும் இல்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கவேண்டும். தற்போது சூழலில் அதிமுகதான் பெரும்பான்மையான அரசு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...