கிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து பொய்சொல்லி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் 2007ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முடிவு செய்யபட்டதை விட 20 சதவீதம் விலை குறைவாகத்தான் தற்போது ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. எனவே இதில் தனி நிறுவனம் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது.

ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் தவறான பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, தேசியபாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.  இந்த ஒப்பந்தம் இருநாட்டு அரசுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடைத்தரகர்கள் இல்லை.  எந்த விதியையும் கடைபிடிக்காமல் நேரடியாக ஒப்பந்தம் செய்து விட்டதாக பிரதமர் மோடி மீது அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட 14 மாதங்கள் கழித்து தான் அது இறுதி செய்யப்பட்டது. இதற்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிக்கும் என்று நம்புகிறேன் .

தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின் மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப் படுத்துகின்றனர்.

‘ஒரு விமானத்திற்கு 7 விலை’ அருண் ஜெட்லி தனது பதிவில், ‘‘ராகுல்காந்தி ரபேல் விமானவிலை தொடர்பாக பல்வேறு விலையை குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் பேசும்போது மட்டும் ஒருமுறை ரூ.520 கோடி என்றார். அதன்பின் ரூ.540 கோடி என்றார். டெல்லியில் ரூ.700 கோடி என்றார். ஏப்ரல் மற்றும் மே மாதம் கர்நாடகாவிலும் இதே விலையைத்தான் கூறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது இதேவிலையை ரூ.520 கோடியாக குறைத்து விட்டார். ஆனால் ராய்ப்பூரில் ரூ.540 கோடியாக உயர்த்திவிட்டார். ஐதராபாத்தில் ரூ.526 கோடி என்று புதிய விலையை நிர்ணயித்து விட்டார்.

இது கிண்டர்கார்டன் பள்ளி விவாதம்போல இருக்கிறது. நான் 500 கொடுத்தேன், நீ 1600 கொடுத்தாய் என்பது போல தான் அவர்கள் கூறுவது இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு எவ்வளவு குறைவான புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் உண்மைக்கு எப்போதும் ஒரேபதில்தான். பொய்கள்தான் பல வடிவங்களில் வெளிவரும். ரபேல் போர்விமானம் பற்றிய எந்தவித விவரமும் தெரியாமல் இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்

நன்றி அருண் ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...