ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்

மேல்மருவத் தூரில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் கடந்தவாரம் ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 சிலைகள் மற்றும் கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அவருக்கு சொந்தமான மேல்மருவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி சுமார் 80 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ரன்வீர் ஷா, சில இடங்களில் இருக்கும் பழையபங்களாக்களை வாங்கி அதனை பராமரித்து வரும் நிலையில், அந்தவீடுகளிலும் சிலைகளை மறைத்து வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில், வீடு முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், 80 சிலைகளையும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பறிமுதல்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்தவாரம் சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் பலபகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கற்சிலைகள், அலங்காரத் தூண்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த மிகப்பழமையான சிலைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏராளமான கோயில் சிலைகளை கடத்தி தொழிலதிபர் ரன்வீர் ஷாவிடம் விற்றதையும், அவர் அதனை எப்படி பதுக்கி வைத்திருக்கிறார் என்பதையும் வாக்குமூலமாகப் பெற்ற பிறகே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் ஒருமாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளை திருப்பிக்கொடுத்து விட்டால் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம். தண்டனையில்லை. இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்.

கடத்தல் சிலைகள் என்று தெரிந்தால் அது பற்றி தாமாகவே வந்து தகவல்களை அளிக்கலாம். தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. சிலைக்கடத்தலில் தொடர்பில்லாதவர்கள் யாருமே பயப்பட வேண்டாம். குற்றமற்றவர்கள் மீது ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படாது. சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையில் மேலும் 9 அதிகாரிகளை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...