ஹிந்து கோவில்களில் இல்லை தீண்டாமை

ஹிந்து மத கோவில்களில் தீண்டாமை பாகுபாடு இல்லை .கிடையவே கிடையாது .பல ஹிந்து கோவில்களில் அதிகாரிகளாக தலித்சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் .அதுமட்டும் அல்ல மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சரி ,பழனி முருகன் கோவில் ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலம் கோவில் ,திருச்செந்தூர் முருகன்கோவில் ஆகிய அனைத்து ஹிந்து கோவில்களிலும் பிராமிணனும் தலித்தும் ஒன்றாக நின்று சாமிதரிசனம் செய்ய முடியும்

கோவிலில் வழிபாடுசெய்ய முடியும் .அதாவது தீண்டாமை மற்றும் சாதி பாகுபாடுகள் கிடையாது அறுபத்தி நாயன் மார்களில் மீனவர் ,வணிகர் வேளாளர் ,கடையர் ,வேடர் ஏகாலியர்,  புலையர் ,குயவர் ,இடையர் ,சாலியர் ஆகிய அனைத்து குலம்/ஜாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் (தற்போது SC ,ST BC ,MBC பிரிவுகளுக்கு நிகர் .அவர்களின் சிலைகள் அனைத்து சைவ கோவில்களிலும் ( கொடிமரம் உள்ள ) உள்ளது .

சிவனுக்கு நிகராக அவர்களுக்கு குரு பூஜைகள் உண்டு .இதைபோன்று அடுத்தமதத்தில் எதிர்பார்க்க முடியுமா ? மத மாற்ற பிரச்சாரங்களுக்கு மட்டும்தான் ஹிந்து மதத்தில் தீண்டாமை மற்றும் ஜாதிப்பிரிவினை உள்ளது என்ற பிறழ் முரண்வாதம் உதவும் .மற்றபடி அது பொருளின்மை வாதங்கள்தான்

இந்தியாவில் கிருஸ்துவர்கள் தீண்டாமையை போற்றுகிறார்கள்.. இந்திய சர்ச்சுகளில் தீண்டாமை உள்ளது..பைபிள் சொல்லாத ஜாதிகள் – கொடுமை கொடுமை இதுதான் கொடுமை தலித்கிருஸ்துவர்கள் ,கிருஸ்துவ நாடார்களுடன் /கிருஸ்துவ வன்னியர்களுடன் /கிருஸ்துவ செட்டியார்களுடன் /கிருஸ்துவ மறவர்களுடன்/கிருஸ்துவ பிள்ளைமார்களுடன் திருமண சம்பந்தம் வைக்க முடியாது முடியவே முடியாது – கிருஸ்துவ நாடார்கள் /கிருஸ்துவ வன்னியர்கள் பெரும்பான்மையானவராக உள்ள சர்ச்சுகளில் தலித் கிருஸ்துவர்கள் உள்ள போகவே முடியாது

.தீண்டாமை கொடுமைதான் .தமிழகத்தில் எத்தனை கிருஸ்துவ மறை மாவட்டங்களின் தலைவர்கள் தலித் கிருஸ்துவர்கள் என்று கணக்கு பார்த்தால் தெரியும் உண்மை ..தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவ திருச்சபைகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம்கேட்டு வீதிகளில் தினமும் போராடுகிறார்கள் .

.அவ்வளவு ஏன் திருச்சி மேலபுதூர் கிருஸ்துவ கல்லறையில் தீண்டாமை தடுப்பு சுவர் – ஆம் தலித் கிருஸ்துவர்களுக்காக – ஆம் வாழும் போது தான் இந்த அவலம் என்றால் கிறிஸ்துவுக்குள் மரித்தாலும் விடாத ஜாதி வெறி. தீண்டாமை வெறி அது மட்டும் அல்ல இம்மானுவேல் சர்ச் – ஆம் இம்மானுவேல் சர்ச் ஆம் இம்மானுவேல் சர்ச் தான் தலித் கிருஸ்துவர்களுக்காக மட்டும் அந்த சர்ச்சுகளில் ஹிந்துக்களின் கருப்பசாமி பாடல்கள் மெட்டுக்களில் (அங்கே இடி முழங்குதே -) கர்த்தர் பாடல்கள் ஒலிக்கின்றன இதற்கு ஹிந்து மனுசாஸ்திரங்கள் காரணமன்று. .செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது ,

தீண்டாமை காரணமாக தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக்கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் – இனத்தை சேர்ந்த கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மிக கொடூரமான /கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள்தான் வாழ வேண்டும் , சாதி கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது. என் உறவினர் குடும்பம் 1895 ம் ஆண்டு ஹிந்து மதத்தில் இருந்து கிருஸ்து மதம் சென்றார்கள் .ஆனால் இன்றுவரை ஜாதி தாண்டி தலித் கிறிஸ்துவர் குடும்பத்தில் திருமண சம்பந்தம் செய்ததில்லை .இதற்க்கு ஹிந்து மதம் காரணம் அன்று . ஆதலால் ஜாதிய வேறுபாடுகளை ,தீண்டாமை வைத்து ஹிந்து மதத்தை இழிவு படுத்த /சிறுமைப்படுத்த/ஏளனங்கள் செய்ய /அவமானங்கள் செய்ய /நக்கல்கள் /நையாண்டிகள் செய்ய முயற்சிக்க வேண்டாம் 

நன்றி செந்தில் சிகாமணி 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...