மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும்- கருத்து கணிப்பு

தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந் தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந் தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந் தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாஜக.வுக்கு அதிக வெற்றிவாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த புதிய கருத்துக் கணிப்பை ஏபிபி.நியூ- லோக்நிதி சிஎஸ்டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பாஜக. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பாஜக. வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்துகணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றிவாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...