இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்பு கொண்டுள்ளார்.

மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல், கடல்வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் உயிரி ழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டான் . இந்நிலையில், இது குறித்து இரு நாடுகளிலும் தீவிரவிசாரணை இன்றுவரை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க பாகிஸ்தான் அரசு முனைப்புகாட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும், மும்பைத்தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்தே சதித் திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக செயல் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் ஒப்புதலுக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு, நம் ராணுவத்தின் தலைமை தளபதியான, ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், மும்பை தாக்குதலை யார்நடத்தினர் என்பது, உலகத்தில் உள்ள அனைவருக்கும், ஏற்கனவே தெரியும். அதை, தற்போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...