இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்பு கொண்டுள்ளார்.

மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல், கடல்வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் உயிரி ழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டான் . இந்நிலையில், இது குறித்து இரு நாடுகளிலும் தீவிரவிசாரணை இன்றுவரை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க பாகிஸ்தான் அரசு முனைப்புகாட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும், மும்பைத்தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்தே சதித் திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக செயல் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் ஒப்புதலுக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு, நம் ராணுவத்தின் தலைமை தளபதியான, ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், மும்பை தாக்குதலை யார்நடத்தினர் என்பது, உலகத்தில் உள்ள அனைவருக்கும், ஏற்கனவே தெரியும். அதை, தற்போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...