நல்ல இஸ்லாமியர் முதலில் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கமாட்டார்கள்

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் பெண்கள் அனுமதிக்கபட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் போராடினார்களாம்

அதில் வந்து நின்ற கம்யூனிஸ்ட் பெண்கள் இவர்கள்தான்

முழுக்க பர்தா அணிந்து கொண்டு கடவுள் நம்பிக்கையோடு , கடவுள் இல்லை என சொல்லும் கட்சிக்கு ஆதவாக வந்திருக்கின்றார்களாம்

அவர்கள் மட்டும் இஸ்லாமில் பெண்களுக்கு விதிக்கபட்டிருக்கு கட்டுபாடுகளை அப்படியே ஏற்பாற்களாம்

உடை முதல் கணவன் எத்தனையும் கட்டலாம் எனும் எல்லா கட்டுபாடுகளையும் ஏற்பார்களாம்

ஆனால் இந்துக்களின் புனிதமான ஆலயத்தில் சமத்துவம் வேண்டுமாம்

நல்ல இஸ்லாமியர் முதலில் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கமாட்டார்கள், அப்படியே ஆதரித்தாலும் இன்னொரு மதத்தாரின் நம்பிக்கையினை தகர்க்கும் விஷயத்தை செய்யவே மாட்டார்கள்

அதையும் மீறி பெண் சமத்துவம் வேண்டுமென்றால் பர்தாவினை மீறிவிட்டு இஸ்லாம் சொன்ன கட்டுபாடுகளை உடைத்துவிட்டு போராட வரட்டும்? வருவார்களா?

கேரள இஸ்லாமிய சகோதரிகள் சிந்திக்கட்டும்

சபரிமலை சுற்றுலா தலம் அல்ல, புனிதமான இந்து ஆலயம்

இஸ்லாமில் சில கட்டுபாடுகள் இருப்பது போல அங்கும் சில பாரம்பரியங்கள் உண்டு

அதை மதிக்க வேண்டும்

நான் என் தாய்க்கு கட்டுபடுவேன் ஆனால் அடுத்த வீட்டுக்காரன் அவன் தாய் சொல்லை கேட்க கூடாது என்பது எவ்வகை நியாயம் சகோதரிகளே?

கம்யூனிஸ்டுகளின் தாயகமான ரஷ்யாவே பக்திமார்க்கத்திற்கு திரும்பிவிட்ட பின் இந்த போலி கம்யூனிஸ்டுகளின் குரலுக்கு செவிசாய்க்காதீர் சகோதரிகளே

இவர்களுக்கு தேவை கலவரங்களே அன்றி வேறு எதுவுமல்ல‌

உங்கள் மார்க்கத்தை இந்துக்கள் மதிப்பது போல, அவர்களின் நம்பிக்கையினை சம்பிரதாயத்தை நீங்களும் மதிப்பதே இங்கு அமைதி நிலவ வழி

அப்படித்தான் இங்கு அமைதி நிலவிகொண்டிருக்கின்றது, அதை குழப்பாதீர்கள்

அதுவும் பிஞ்சுக்கள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள், நல்ல இந்திய இஸ்லாமியர்களாக அவர்கள் வளரட்டும், வெறும் இஸ்லாமியரார்களாக வளர்த்துவிடாதீர்கள்

உங்கள் புனிதமான நபிபெருமானின் போதனையினை படியுங்கள், அந்த நபிபெருமகனார் யூதர்களையும் , கிறிஸ்தவர்களையும் எப்படி அரவணைத்திருக்கின்றார், எப்படி எல்லாம் மத சமத்துவம் பேணியிருக்கின்றார் என்பதை பாருங்கள்

அவர்கள் வழிவந்த நீங்களா இந்துக்களின் நம்பிக்கையினை தகர்க்க நினைக்கின்றீர்கள்? இதுவா இஸ்லாம் சொன்னது?

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு..” என்ற புகழ்மிக்க உங்கள் தத்துவம் எங்கே போனது?

தயவு செய்து இந்துக்களின் உணர்வுகளை மதித்து அவர்கள் பாரம்பரியம் தொடர வழிவிடுங்கள்

நன்றி Stanley Rajan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...