பிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்

நாடாளுமன்ற தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அடுத்த மாதம் 10 மற்றும் 19-ம் தேதிகளில், பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் பரப்புரை கூட்டங்களில் பேசவருகிறார். இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 10 மற்றும் 19-ம் தேதிகளில், பிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். அடுத்த மாதம் 10-ம்தேதி, திருப்பூர் அல்லது கன்னியா குமரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார் என்றும், 19-ம்தேதி சென்னையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இம்மாதம் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகை தமிழகத்தில், மாபெரும் மாற்றத்தை உருவாக்கி தரும் என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு துரோகம்செய்ய நினைக்கும் கூட்டம்தான், எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவிற்குவரும் மோடிக்கு, கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்துள்ளது, என்றும் குறிப்பிட்டார்.

மேலும், எந்த கட்சியோடும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு கிடையாது என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...