நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி

கடந்த 3 ஆண்டுகாலமாக நீட் தேர்வை நாடுமுழுவதும் உள்ளதைப்போல் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்கொண்டு சிறப்பான இடங்களை பெற்று வருகிறார்கள்.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை.இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.

சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.

இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 143148 பேரில் 79633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17067 பேரில் 11121 பேர் பேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15451 பேரில் 7441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் .கர்நாடக மாநிலத்தில் தேர்வெழுதிய 15216 பேரில் 9219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் .ஆந்திராவில் தேர்வெழுதிய 10885 பேரில் 6323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . உத்திர பிரதேசத்தில் தேர்வெழுதிய 9712 பேரில் 4173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . இந்திய அளவில் முதுநிலை மிருதுவா படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79633 பேரில் 11121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில்தான் சேரப்போகிறார்கள்.

நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். நீட்தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி ,மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது. உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன் ,சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணிற்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரியவாய்ப்பு போன்ற பல உதாரணகளை மறைக்க முடியாது. அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது. பலரின் மருத்துவராகும் கனவும் நனவாகிறது.

நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள்.இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது.அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக -காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் உருவானது. அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது.

4 ஆண்டுகால ஆட்சியில் 6000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள், 13000 க்கும் அதிகமான புதிய MBBS இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 80 க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் நாடெங்கும் புதிதாக தொடங்கப் பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களின் பணிக்காலம் 65 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் மலிவு விலை மருந்தகங்கள் தொடங்கப் பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் , அன்றாட அத்தியாவாசிய மருந்துகளான சர்க்கரை நோய் ,இரத்த கொதிப்பு ,கொழுப்பு நோய், இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய மருந்துகள் போன்ற 200 வகை மருந்துகளின் விலை குறைக்கப் பட்டுள்ளது. இது தவிர இருதய ஸ்டெண்ட் விலை 150000 திலிருந்து 25000 மாக விலை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செயற்கை மூட்டுகளின் விலை லட்சங் களிலிருந்து சில ஆயிரங்களாக குறைக்கப் பட்டுள்ளது .கர்ப்பிணி பெண்கள் சிறப்பு பேறுகால கவனிப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பல மக்கள் நலம்சார்ந்து செய்து வரும் மோடி அவர்களின் அரசை வெறும் நீட் தேர்வை காட்டும் வைத்து விமர்சிக்க வேண்டாம்.

இதேபோல்தான் கீழடி அகழ்வாய்வு ஆராய்விலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது.எனவே நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். அதை தேர்தல் அரசியலுக்காக கருவியாக பயன்படுத்த வேண்டாமென்று தமிழக நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் அதற்கு துணை நின்ற காங்கிரஸ் உடன் தான் தற்போதும் கூட்டணி வைத்துள்ளீர்கள் இலங்கை தமிழர்களுக்காக வாழ்வதாக காட்டிக்கொண்டிருக்கும் வைகோ-திருமாவளவன் போன்றோர் இன்று அதையெல்லாம் மறந்து சுய லாபத்துக்காக அதே காங்கிரஸ் உடன் கைகோர்த்து நிற்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...