மராட்டிய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டு களுக்கான புதியதொழில் கொள்கையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். மும்பையில் நடந்த இந்தநிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்துகொண்டார். இந்த புதிய தொழில் கொள்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் நடைமுறைக்குவருகிறது. ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை இலக்காக வைத்து இந்ததொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
உலகளாவிய தொழிலதிபர்கள் மராட்டியத்தை தங்களதுவீடாக கருதி இங்கு முதலீடுகளை தொடங்க விரும்புகிறார்கள். இதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகிடைக்கும். இதில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் வேலைக்காக இடம் பெயராமல் சொந்த மண்ணிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் அரசுதான் வெற்றிகரமான அரசாகும்.
2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டணியான எங்கள் இருகட்சிகளுக்கும் இடையே பல விஷயங்களில் ஒத்துவர வில்லை.
கடந்த சில நாட்களாக பாஜக அரசின் நற்செயலை கவனித்து வருகிறேன். பாஜக – சிவசேனா உறவில் என்ன வேறுபாடுகள் இருந்தாலும் அதுநாட்டின் வளர்ச்சியை ஒரு போதும் பாதிக்காது. கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினையில் பாஜக அரசுக்கு எதிராக நாங்கள்தான் முதலில் கேள்விகளை எழுப்புகிறோம். இதனால் தான் சரியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.