பாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது

தனி நபர் ஒருவரை மட்டுமே சார்ந்து பாஜக இயங்கிய தில்லை; அது கருத்தியலை அடிப்படையாக  கொண்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்

பா.ஜ.க மீது காங்கிரஸ் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, அது மோடி என்ற ஒருதனிமனிதரைச் சுற்றியே செயல்படுகிறது என்பதுதான்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விளக்கமளித்திருக்கிறார். டெல்லியில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர், `பா.ஜ.க, கடந்த காலங்களில் வாஜ்பாய் அல்லது அத்வானியின் கட்சியாக என்றுமே இருந்ததில்லை. அதேபோல் தற்போது மோடி அல்லது அமித்ஷாவின் கட்சியாக இருந்ததில்லை. பா.ஜ.க என்பது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.

ஒருதனிநபரை முன்னிறுத்தும் அல்லது அவரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்ல பா.ஜ.க. கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.கவில் என்றுமே குடும்ப ஆட்சிஇருக்காது. மோடியை மையமாக வைத்தே பா.ஜ.க செயல்படுகிறது என்று கூறுவது தவறானது. கட்சியின் நாடாளுமன்றக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.
ஒருகட்சி வலிமையானதாக இருந்து, அதன் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தேர்தலில் வெல்லமுடியாது. அதேபோலத்தான் தலைவர் வலிமையான வராக இருந்து கட்சி பலவீனமாக இருந்தாலும் வெற்றிகிட்டாது. மக்கள் மத்தியில் ஒரு தலைவர் செல்வாக்கானவாராக இருந்தால், அவரது பெயர் முன்னிலையில் வரும் என்பது இயற்கையானது தான்” என்று கூறியிருக்கிறார் நிதின்கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...