மேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி கிடைக்கும்; கருத்து கணிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி கிடைக்கும் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை கைபற்றி பெரும் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி 2 இடங்களில்மட்டுமே வெற்றிபெற்றது. 2009- மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி 13 இடங்களை கைபற்றியது.

2009- மக்களவைத் தேர்தலில் 15 இடங்களி்ல் வெற்றிபெற்ற நிலையில் திரிணாமுல் 34 இடங்களை கைபற்றியது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், இடதுசாரி கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றன.

2014-ம் ஆண்டு  தேர்தலில் 17 சதவீத வாக்குகளைபெற்ற பாஜக 2 இடங்களில் வென்றது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜக கணிசமான வளர்ச்சிபெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலி இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம்பெற்றது. மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதே வேகத்துடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸூடன் மோதுகிறது.

தேர்தல் அறிவிப்புவெளியானது முதலே அம்மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் இடையே தொடர்ந்து அடிதடி மோதல்கள் நடந்துவருகின்றன.

 

இடதுசாரிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரையில் தங்களுக்கு வலிமைஇல்லாத தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரிவருவதாக கூறப்படுகிறது. இதனை இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், கீழ்மட்ட அளவில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் மத்தியில் பாஜக ஆதரவுபோக்கு காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வழக்கமாக இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடுத்தரவகுப்பு மக்கள் இந்தமுறை பெருமளவு பாஜக மீது ஈர்ப்புகாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.  மேற்குவங்க நிலவரம் குறித்து இந்தியாடுடே வெளியிடப்பட்டுள்ள கருத்துகணிப்பு:

மொத்த தொகுதி: 42

பாஜக 19- 22

திரிணாமுல் காங்கிரஸ்: 19 -22

காங்கிரஸ் : 1

இடதுசாரி: 0

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...