லண்டனில் ராபர்ட் வதேராவின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது

லண்டனில் உள்ள பிரியங்கா காந்தி கணவரின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது !! துபாயிலிருந்து கடத்தப் பட்ட பணம் காட்டிக் கொடுத்தது!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கம் என்ற இடத்தில் உள்ள சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும், அது தொடர்பாக அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து அவரிடம் இதுவரை 11 தடவை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இருப்பினும்,அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ராபர்ட் வதேராசெல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே, லண்டன் உள்பட இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் ராபர்ட் வதேராவுக்கு வேறு சில சொத்துக்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, ரூ.45 கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீடு, அதேபோல ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராதான் என்றும் சந்தேகிக்கிறது.

இவற்றை வாங்க சைப்ரஸ், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ரகசிய பண பரிமாற்றம் நடந்ததையும் கண்டுபிடித்துள்ளது. அந்த பணம் கடத்தல்தான் இந்த சொத்துக்கள் வாங்கியதற்கான ஆதாரம் என கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை இங்கிலாந்து அரசுக்கு அளித்துள்ளதாகவும், விரைவில் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டு விடும் எனவும் கூறப்படுகிறது…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...