லண்டனில் ராபர்ட் வதேராவின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது

லண்டனில் உள்ள பிரியங்கா காந்தி கணவரின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது !! துபாயிலிருந்து கடத்தப் பட்ட பணம் காட்டிக் கொடுத்தது!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கம் என்ற இடத்தில் உள்ள சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும், அது தொடர்பாக அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து அவரிடம் இதுவரை 11 தடவை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இருப்பினும்,அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ராபர்ட் வதேராசெல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே, லண்டன் உள்பட இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் ராபர்ட் வதேராவுக்கு வேறு சில சொத்துக்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, ரூ.45 கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீடு, அதேபோல ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராதான் என்றும் சந்தேகிக்கிறது.

இவற்றை வாங்க சைப்ரஸ், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ரகசிய பண பரிமாற்றம் நடந்ததையும் கண்டுபிடித்துள்ளது. அந்த பணம் கடத்தல்தான் இந்த சொத்துக்கள் வாங்கியதற்கான ஆதாரம் என கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை இங்கிலாந்து அரசுக்கு அளித்துள்ளதாகவும், விரைவில் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டு விடும் எனவும் கூறப்படுகிறது…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...