சபாஷ், ஒற்றை எம்பி!

நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனின் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லக்கூடாது என்பது சபரிமலையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த வழிமுறை. ஆனால், இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லி, சபரி மலை வழிபாட்டுக்கே சம்பந்தமில்லாத ஒரு வக்கீல்களின் குழு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல வழக்கத்தில் இருந்த தடையை நீக்கி 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளும் முன்வைத்தன. ஆனால், மேல்முறையீடு செய்ய கேரள அரசு மறுத்தது. இதனால் போராட்டம் வெடித்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வளவு அதிருப்தியை சந்திப்பது ஏன் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் எழுந்தது.

ஆனால், இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமானால், இந்துக்கள் ஓட்டு காங்கிரசுக்கு போகாமல் பாஜவுக்கு பிரியும். எதிர்ப்பு ஓட்டுகளை காங்கிரசும் பாஜவும் பிரித்துக் கொண்டால் நம்முடைய பாரம்பரியமான ஓட்டுகள் நமக்கு கிடைக்கும்; எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போட்ட கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொண்டது.

தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்ற பெயரிலும், போராட்டக்காரர்களை ஒடுக்குகிறேன் என்ற பெயரிலும் ஐயப்ப பக்தர்களையும் இந்துக்களையும் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுபடுத்தியது.

தேர்தல் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான பிரேமசந்திரன், 17வது லோக்சபாவின் முதல் தனிநபர் மசோதாவை கொண்டுவர நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

‘சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் (சிறப்பு ஏற்பாடு) மசோதா 2019’ என்று பெயரிட்டுள்ள அந்த மசோதாவில் சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்; 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு வழக்கத்தில் இருந்த தடை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காலம் கடந்து வந்த ஞானமாக இருந்தாலும், செய்த தவறை உணர்ந்து அதற்கு பரிகாரமாக பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டுவந்த எம்பிக்கு பாராட்டுக்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்து தீர்மானம் நிறைவேறவிடாமல் தடுக்க அவர் சார்ந்த கூட்டணிக்கு லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நாதியில்லை என்பது கூடுதல் ஆறுதல். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சபரிமலை பிரச்னைக்கு புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.

நன்றி :கோபால் ஜி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

குழந்தைகளின் நலனை மேம்படுத்து ...

குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் தேசிய இயக்கம் JP நட்டா தலைமையில் நேற்று கொண்டுவரப்பட்டது குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை ...

18-வது மக்களவையின் முதல் கூட்டத் ...

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மோடி ஆற்றிய உரை "இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமிதத்திற்குரிய நாள், இது பெருமைக்குரிய ...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கா ...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?கார்கேவுக்கு நட்டா கடிதம் ``ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...