உலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந் துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ‌தெரிவித்துள்ளார்‌

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்று‌‌ள்ள அவர், ஒசாகா ‌நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தான் 2014ல் ‌இந்திய பிரதமரானபிறகு ஜப்பான் உடனான நட்பை மேம்படுத்த‌ நல்லவாய்ப்பு கிட்டியதாகக்‌‌ கூறினார். தலை‌ ந‌கரங்கள் மற்றும் தூதர்களைத் தா‌ண்டி ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும், தானும், இருநாடுகள் இடையிலான ராஜாங்க உ‌றவை பொதுமக்களிடம் கொண்டு சென்றிருப்பதாக மோடி கூறினார்.

சுவாமி விவேகானந்தர், ரபீந்திர நாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள், நேதாஜி‌ சுபாஷ் சந்திரபோஸ்,‌ நீதிபதி ராதா பினோத் பால் போன்ற ஆளுமை நிறைந்த தலைவர்கள் எல்‌லாம் ஜப்பான் உடனான‌ உறவை மேம்படுத்தி வந்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

ஜப்பானுக்கும் இந்தி‌யாவுக்கும் இடையிலான உறவு இன்றுநேற்று வந்தது அல்ல, பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்றும் பிரதமர் தெரி்வித்தார்.

ஏழு மாதங்களுக்கு முன்ன‌ர்தான் ஜப்பான் வந்திருந்தபோது, ஜப்பான் மக்கள் சின்சோ அபேவுக்கு மீண்டும் வெற்றியைத் ‌தந்ததாக மோடி கூறி‌னார். உலகின் மிகப்பெரிய ஜனநாய‌க நாடான இந்தியாவில் நடைபெற்றதேர்தலில், ஒருபிரதம ‌சேவகனாக நாட்டு ம‌க்கள் தன் மீது அதீத நம்பிக்கை வை‌த்து‌ அபரிமிதமான வெற்‌றியை‌ தந்ததாக மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்தியாவும்‌ ஜப்பானும் இணைந்து புல்லட்‌ரயில் தயாரிக்கும் என்றும் பிரத‌ம‌ர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியர்கள் கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசுவதற்கு முன்பாக அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மக்கள் பிரதமரை கண்டதும், “ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும் “வந்தேமாதரம்” என்ற கோஷமும் எழுப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...