ஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன் கோயில்களுக்காகவும், பாரம்பரியத்தை காப்பதற்காக காலம்காலமாக பாடுபட்டு வருபவர்கள் நகரத்தார்கள் என தெரிவித்தார். பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் வைத்துகொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வழக்கம் என்பதால் இந்தஆண்டு பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசில் கொண்டுசெல்லவில்லை என கூறினார்.
நரேந்திர மோடி அரசு ஊழல் அரசல்ல என்றும் தங்கள் அரசு சூட்கேஸ் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சுதந்தர மடைந்ததில் இருந்து உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம் என ஆதங்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல்வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பேசியவர், மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கவில்லை தமிழை வளர்க்கிறது எனவும் குறிப்பிட்டார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |