டிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டுமென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்திகட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு உச்சிமாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வுகாண உதவிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்புதெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவகாரம்; இரு நாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண உதவி செய்ய தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்தவிவகாரம் தொடர்பாக ஒரு செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார். இந்தியாவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.

சீனாவின் எழுச்சிக்கு பதிலடிகொடுக்க முக்கியமான நாடான இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நட்புறவை அமெரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான  நட்புறவை அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூபுஷ், ஒபாமா ஆகியோர் பேணிவளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத்தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிகவரிகளை விதிப்பதாக  குற்றம் சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும்நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப்பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...