திஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

ஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிரமுயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்குசெல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும்பொருட்டு சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்தநேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைதுசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டுவாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .

ஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மையை கருத்தில்கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்பகட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில்வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

உடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டுசெல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில்கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுகொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...