அஸ்ஸாம் : தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்துக்குப் பின்பும் 3 தொகுதிகளை தக்க வைத்த பாஜக!

அஸ்ஸாமில் 4 சட்ட சபை தொகுதிகள் இடைத் தேர்தலில் பாஜக ஏற்கனவே வென்ற 3 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது நாடுமுழுவதும் பெரும் விவாதத்துக்குள்ளான தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரமானது பாஜகவின் வெற்றியை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதன்படி சுமார் 90.00.000 லட்சம்பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அஸ்ஸாமில் குடியேறி இருப்பது தெரிய வந்தது. இதுநாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியது. பல்வேறு மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்த இதை நடைமுறைப் படுத்தப் போவதாக அறிவித்தன.

அதேநேரத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கை என அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. இந்நிலையில் அஸ்ஸாமின் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா மற்றும் ஜனியா ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் எதிரொலிக்கும் என கூறப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா ஆகிய 3 தொகுதிகளையும் பாஜக தக்கவைத்துள்ளது. ஜனியா தொகுதியை ஏ.ஐ.யூ.டி.எப்- இடம் காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறத

ரதாபாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 10,000 வாக்குகள் முன்னணியில் இருக்கிறார் பாஜகவின் பிரேந்திர ரபிதாஸ். ரங்காபாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட பாஜகவின் ராஜேன் போர்தாகூர் சுமார் 28,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். சோனாரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜகவின் நபிந்தா ஹண்டிஹ் சுமார் 2,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். ஜனியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 10,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். பொதுவாக தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரம் பாஜகவுக்கு அஸ்ஸாமில் பின்னடைவை தரவில்லை. கை கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.