அஸ்ஸாம் : தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்துக்குப் பின்பும் 3 தொகுதிகளை தக்க வைத்த பாஜக!

அஸ்ஸாமில் 4 சட்ட சபை தொகுதிகள் இடைத் தேர்தலில் பாஜக ஏற்கனவே வென்ற 3 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது நாடுமுழுவதும் பெரும் விவாதத்துக்குள்ளான தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரமானது பாஜகவின் வெற்றியை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதன்படி சுமார் 90.00.000 லட்சம்பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அஸ்ஸாமில் குடியேறி இருப்பது தெரிய வந்தது. இதுநாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியது. பல்வேறு மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்த இதை நடைமுறைப் படுத்தப் போவதாக அறிவித்தன.

அதேநேரத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கை என அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன. இந்நிலையில் அஸ்ஸாமின் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா மற்றும் ஜனியா ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் எதிரொலிக்கும் என கூறப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா ஆகிய 3 தொகுதிகளையும் பாஜக தக்கவைத்துள்ளது. ஜனியா தொகுதியை ஏ.ஐ.யூ.டி.எப்- இடம் காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறத

ரதாபாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 10,000 வாக்குகள் முன்னணியில் இருக்கிறார் பாஜகவின் பிரேந்திர ரபிதாஸ். ரங்காபாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட பாஜகவின் ராஜேன் போர்தாகூர் சுமார் 28,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். சோனாரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜகவின் நபிந்தா ஹண்டிஹ் சுமார் 2,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். ஜனியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 10,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். பொதுவாக தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரம் பாஜகவுக்கு அஸ்ஸாமில் பின்னடைவை தரவில்லை. கை கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...