எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை  திரும்ப திரும்ப சொல்வதன்  மூலம் உண்மையாக்கி விடலாம் என்கிற ராகுலின் கனவில் மண் விழுந்துள்ளது.

 

2014 ஆம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பொழுது நாட்டின் பாதுகாப்பு பல வழிகளிலும் பலவீனப்பட்டே இருந்தது. அது உட்கட்டமைப்பிலா?, ஆயுத தளவாடங்களிலா? என்றாள் இரண்டிலுமே எனலாம்.

உள்கட்டமைப்பிலோ முக்கிய பாதுகாப்பு கேந்திரங்கள் பலவற்றில் போர் விமான தளங்கள் இல்லை, இந்திய-சீன எல்லைகள் எங்கும் சரியான சாலைகள் இல்லை, ராணுவத்தையோ ஆயுதங்களையோ விரைவில் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருந்தது. ஆனால் இன்று அந்தக் குறைகள் களையப்பட்டு விட்டது.

பாதுகாப்பு தளவாடங்களிலோ ராணுவத்துக்கு தேவையான காலணிகள் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. உயிர்காக்கும் குண்டுதுளைக்காத கவச ஆடைகளை கூட விரைவில் கொள்முதல் செய்து கொடுக்கும் நிலை இங்கு இல்லை. ஆனால் இன்று நிலைமை சீரடைந்து விட்டது. . மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவைகள் எல்லாம் இன்று இந்தியாவிலேயே உற்பத்தியாகிறது .

அதேபோன்று ஆயுதங்களிலும் பற்றாக்குறை, வெடி மருந்துகளிலும் பற்றாக்குறை, போர் விமானங்களில் பற்றாக்குறை, கூடிக்கொண்டே வந்த காலாவதி போர் விமானங்களின் எண்ணிக்கை எல்லாம் இந்திய பாதுகாப்பை ஒரு இக்கட்டான நிலையிலேயே வைத்திருந்தது.

காரணம் முந்தைய காங்கிரஸ் அரசியல் ஆயுதக் கொள்முதலில் காணப்பட்ட ஆதாய தாமதங்களும், சாத்தியமற்ற ஒப்பந்தங்களுமே.. உதாரணத்திற்கு ரஃபேல் போர் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்யவே முந்தைய காங்கிரஸ் அரசுக்கு 10 வருடம் (2001-2012) தேவைப்பட்டது. ஒரு ரபேல் விமானத்தை 600 கோடி என்ற விதத்தில் 126 விமானங்களை 72000 கோடிக்கு கஜானாவில் காசே இல்லாமல் ஓப்பதம் போட்டார்கள்.

மேலும் விவிஐபி.,க்கான 12 சொகுசு  ஹெலிகாப்ட்டர்களை தலா ரூ 300 கோடி என்று 3200 கோடிக்கு மிகவும் நவீனம் நிறைந்ததாக வாங்க முற்பட்டவர்கள். மிகவும் மதிப்பு, சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டிய போர் விமானங்களை  தலா ரூ 600 கோடி மதிப்புக்கு சாதாரண தொழில்நுட்பத்தில் வாங்க முற்பட்டது எனோ?.  அதுவும் முப்பது, நாற்பது வருடம் கழித்தே கிடைத்திருக்கும்.. .

எனவேதான் பதவி ஏற்ற 2 வருடத்தில் புதிய ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடியே பிரான்ஸ் அதிபருடன் நேரடியாக பேச்சு நடத்தி  இறுதி செய்தார். ஒரு விமானத்தின் விலை 1300 கோடி என்று 36 விமானங்களின் விலை 52000 கோடியாக இருக்கலாம். ஆனால் அது உச்ச பட்ச தொழில்நுட்பத்துடன் இந்த நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. உலகில் வேறு எந்த நாட்டுக்கும் தராத தொழில் நுட்பத்தை பிரான்சின் டசல்ட் ஏவியேஷன் நிறுவனம் தர பிரான்ஸ் அனுமதி தந்துள்ளது என்பதே இதன் சிறப்பு மதிப்பு. .

தாங்கள் நிர்ணயித்த விலையை விட இரண்டு மடங்கு விலை. இதில் ஊழல் நடந்துள்ளது. இல்லாவிடில்  இவ்வளவு மதிப்புக்கான இதன் சிறப்புகள் என்ன என்கிற ராகுலின், கேள்விக்கான பதிலை தான் சற்று பதற்றத்துடனே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தேடுகின்றன. இதன் உண்மை மதிப்பு இந்த நாடுகளுக்கு தெரியுமே ஒழிய!  எதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ராகுலுக்கு, காங்கிரஷ்க்கு   தெரிய வாய்ப்பே இல்லை .

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்  

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...