வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைக் குறைத்தவா் பிரதமா் நரேந்திரமோடி என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பாராட்டினாா்.
மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப்படை (எஸ்பிஜி படை) சட்டத்திருத்த மசோதா மீது புதன் கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவுகள் குறித்து அமித்ஷா பேசியதாவது:
இதற்கு முன், பிரதமராக பதவி வகித்தவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, எரிபொருள் நிரப்புவதற்காக அல்லது இரவு நேரத்துக்காக விமானங்கள் நடுவழியில் நிறுத்தப் பட்டால், அங்குள்ள ஹோட்டல்களில் தனியறை எடுத்து தங்குவது வழக்கம்.
ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அதுபோன்று ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கியதில்லை. அங்குள்ள விமான நிலையத்தில் அளிக்கப்படும் அறையிலேயே தங்கிவிடுவாா். அங்குள்ள குளியல் அறையையே பயன் படுத்திக்கொள்வாா்.
மேலும், வெளிநாட்டுப் பயணத்தின் போது மிக குறைவான அலுவலா்களையே உடன் அழைத்துச்செல்வாா். அதாவது, 20 சதவீத்துக்கும் குறைவான அலுவலா்களையே அவா் அழைத்துச்செல்வாா்.
இதற்கு முன்பு பிரதமருடன் செல்லும் அலுவா்களுக்கு தனித் தனி வாகனங்கள் ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், நான்கைந்து போ் ஒரேகாரில் அல்லது ஒரே பேருந்தில் செல்லவேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். அதன்படியே ஏற்பாடு செய்யப்படுகிறது என்றாா் அமித் ஷா.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |