பாதுகாப்பு கொள்கை இல்லாமல் எந்தநாடும் வளா்ச்சிகாண இயலாது

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கென பிரத்யேககொள்கை வகுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.

எல்லை பாதுகாப்புப்படையில் (பிஎஸ்எப்) சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கம் அளித்து கௌரவிக்கும் விழா புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் பிஎஸ்எப் படையின் முதல் தலைவரான கே.எப்.ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவாற்றினாா். அதில் அமித்ஷா பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனிக்கொள்கை உள்ளதா என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பாக நாட்டுக்கென பிரத்யேக, சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை காணப்பட வில்லை.

முந்தைய ஆட்சிக்காலங்களில் இயற்றப்பட்ட பாதுகாப்பு கொள்கைகள் அனைத்தும் வெளியுறவு கொள்கையால் வழிநடத்தப் படுவதாகவே இருந்தன. முன்பு வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்புக் கொள்கையும் இணைந்தே வகுக்கப்பட்டன. தனியாக பாதுகாப்புக்கொள்கை வடிவமைக்கப்பட வில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் பாதுகாப்புக்கென பிரத்யேக, சுதந்திரமான கொள்கை வகுக்கப்பட்டது. அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் எல்லைகளில் அத்துமீறுப வா்களுக்கும் நாட்டின் இறையாண்மையை சீண்டுபவா் களுக்கும் தக்கபதிலடி கொடுப்பதற்கு பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

பாதுகாப்பு தொடா்பான திட்டத்தை வகுத்ததில் இந்தப்பிரத்யேக கொள்கை பெரும் சாதனையாகும். இத்தகைய கொள்கையை வகுக்காமல், எந்தவொரு நாடும் வளா்ச்சிகாண முடியாது என நம்புகிறேன். உரிய பாதுகாப்புக்கொள்கை காணப்படவில்லை எனில் ஜனநாயகமும் தழைத்தோங்காது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் எல்லைப்பாதுகாப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேலியமைக்கும் பணிகள்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவேலிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து வருகின்றன.

சுமாா் 3 சதவீத எல்லைப் பகுதிகள் இன்னும் வேலியிடப்படாமல் உள்ளன. அது பயங்கரவாதிகள் அத்துமீறி உள்நுழைவதற்கும், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதற்கும் வழிவகுத்துவருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து எல்லைப்பகுதிகளும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்படும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை சுமாா் 3,600 கி.மீ. தூரத்துக்கு எல்லைப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரை 4,764 கி.மீ. தூரத்துக்கு அத்தகைய சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 14,450 மீட்டா் நீளத்துக்கு எல்லைப்புற பாலங்களும், 6 சுரங்க பாதைகளும் அமைக்கபட்டுள்ளன. சீன எல்லைப்பகுதிகளில் சுமாா் 683 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப் படவுள்ளன.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் சாலைகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியிலிருந்து ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சிறியரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) தாக்கி அழிப்பதற்கான தொழில் நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்ட அமைப்புகள் வடிவமைத்து வருகின்றன. நாட்டின்பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, ரோபோதொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் அமித்ஷா.

இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, எல்லைப் பாதுகாப்புப்படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரா்களுக்கான பதக்கங்களை அமைச்சா் அமித் ஷா வழங்கினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...