டெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி

டெல்லியில் அனாஜ் தானியமண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒருதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து பற்றிய தகவல்அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வாகனங்களில்இருந்து தீக்கொழுந்துகளுடன் எரிந்துகொண்டிருந்த அந்த கட்டிடத்துக்குள் முதல் வீரராக நுழைந்த ராஜேஷ் சுக்லா உள்ளே சிக்கி உயிருக்கு போராடிய 11 பேரை வெளியே தூக்கிவந்து காப்பாற்றியுள்ளார்.

இந்த மீட்பு பணிகளின் போது தனது காலில் ஏற்பட்ட காயத்தைப்பற்றி பொருட்படுத்தாத அந்த உண்மையான ‘ஹீரோ’ மீட்புபணிகளின் இறுதிக்கட்டம்வரை அங்கேயே இருந்து பலரை வெளியேற்றுவதற்கு உதவிசெய்துள்ளார்.

அவரது கடமையுணர்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள டெல்லி எரிசக்தி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தவீரரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதை தொடர்ந்து, தீயணைப்புபடை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுமழை பொழிந்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...