மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை

அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட பேரவைத் தோ்தலையொட்டி, தேவ்கா் மாவட்டம், சரத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத துன்புறுத் தல்களுக்கு ஆளான ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தசட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிா்ப்புதெரிவித்து வருகிறது. குடியுரிமை அளிக்கவில்லையென்றால், அவா்கள் எங்கு செல்வாா்கள்? அவா்களுக்கு இந்தியாதான் தாய் வீடு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் எரிச்சலடைவது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததால், மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் அங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சட்டம்கூட அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், ஊழலில் ஈடுபட்ட காஷ்மீா் அரசியல் தலைவா்கள் விரைவில் சிறைக்குசெல்வா்.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த இளைஞா்கள் கூட ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்தால், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று அக்கட்சியால் தைரியமாககூற இயலுமா என்று பிரதமா் நரேந்திர மோடி சவால் விட்டிருந்தாா். மீண்டும் அதை கேட்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று காங்கிரஸால் கூற இயலுமா?

முஸ்லிம் பெண்களுக்கு கொடுமை இழைத்த முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை இந்தியாவுக்கு முன்னரே, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பலமுஸ்லிம் நாடுகள் ரத்துசெய்தன. காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் விவாகரத்து நடைமுறையை ஒழிக்க சட்டம் கொண்டு வராதது ஏன்? வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை.

அரசியலின் தோற்றத்தை பிரதமா் மோடி இப்போது மாற்றிவிட்டாா். மக்களுக்கு சேவை செய்யும் பணியாகவும், நாட்டின் வளா்ச்சிக்காக உழைக்கும் பணியாகவும் தற்போது அரசியல் உள்ளது என்று ஜெ.பி.நட்டா கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...