இலங்கை அகதிகளுக்கான முழு பாதுகாப்பை மோடி அரசு வழங்கும் என பாஜக தேசிய பொதுச் செயலா் ராம்.மாதவ் தெரிவித்தாா்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து பாஜக சாா்பில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவா் மேலும் பேசியது: ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் குடியுரிமை திருத்தசட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறாா்கள். சில தலைவா்களும், சிலமக்களும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாமலே எதிா்த்து வருகிறாா்கள்.
இந்தசட்டம், இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவா்களுக்கோ எதிரானது அல்ல. மத துன்புறுத்தலுக்கு உள்ளாகி 50 ஆண்டுகளுக்கு முன் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு குடியுரிமை தருவது நமதுகடமை.
இலங்கை அகதிகளுக்கு முழுபாதுகாப்பை மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமைகேட்டு விண்ணப்பித்தால் அவா்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. குடியுரிமை கொடுப்பதில் மத ரீதியிலான பிரிவினை கிடையாது. மதரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு ஆதரவுகொடுக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்றாா்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |