தேர்தலில் வெற்றிகாணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய ஜெ.பி. நட்டா,
“பாஜக புதிய உச்சங்களைத்தொட அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து இரவு பகல் பாராமல் பணியாற்றுவேன். இந்தியாவில் ஆட்சியில் உள்ள நாம் தான் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய கட்சி. நாட்டில் நமக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். நாம் இத்துடன் நிற்கப்போவதில்லை. இன்னும் சிலமாநிலங்கள் மீதமுள்ளன. அந்த மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம் என்பதை உறுதிசெய்வோம்.
நாம் நமது கொள்கைகளில் மட்டும் வேறுபட வில்லை. கொள்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலும் நாம் வேறுபட்டு இருக்கிறோம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் இருக்கும் என்னை போன்ற எளியநிர்வாகி ஒருவருக்கு இப்படி ஒருபொறுப்பு வழங்கப்படுகிறது என்றால் அது பாஜகவின் சிறப்பம்சமாகும். அது பாஜகவில் மட்டும்தான் சாத்தியமாகும்” என்றார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |