”பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கைப்பாவையாக, ஸ்டாலின் உள்ளார்,” என, பா.ஜ.க, தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் பேசினார்.
கிருஷ்ணகிரியில், பா.ஜ., சார்பில் நடந்த, மாற்றுகட்சியினர் இணையும் விழாவில், அவர் பேசியதாவது:மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், ஸ்டாலின் குறை கூறிக் கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அதிஷ்டம் இல்லாதவர். 1947ல், பாகிஸ்தானில், 24 சதவீத இருந்த ஹிந்துக்கள், தற்போது, 1 சதவீதமே உள்ளனர்.இந்தியாவில், மசூதிகளின் எண்ணிக்கையை நினைத்துபார்க்க வேண்டும்.
தேசிய குடியுரிமை சட்டதிருத்த மசோதாவால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பதாக, ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டுவிலக தயார். பா.ஜ., இருக்கும் வரை, ஸ்டாலின் முதல்வராக முடியாது.முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக, ஸ்டாலின் பொய்கூறுகிறார். பா.ஜ.,வின் கைப்பாவையாக, அ.தி.மு.க., உள்ளதாக, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார். இவ்வாறு அவர்பேசினார்.சந்தன வீரப்பன் மகள்பா.ஜ.,வில் ஐக்கியம்கிருஷ்ணகிரியில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்தமகள் வித்யா ராணி, பா.ஜ.,வில் இணைந்தார்.வித்யா ராணி பேசுகையில், ”மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதுதான், என் தந்தையின் எண்ணம். அவர் தவறான வழியை தேர்வுசெய்தாலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்,” என்றார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |