கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்.எல்,.ஏக்களின் ஆதரவு இருந்தநிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்து இருந்தனர்.
இந்நிலையில், மத்தியபிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். .
பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கியுள்ள 19 எம்எல்ஏக்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒரு வரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். இதையடுத்து மத்தியபிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவி விலகச்செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவிவழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளது. இதற்கு ஏதுவாக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதனால் மத்தியபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
‘‘இது காங்கிரஸ்கட்சியின் உள் விவகாரம். இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.
அதேசமயம் இந்த அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிபூசல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை தீர்க்கவேண்டியது அந்த கட்சிதான். முதல்வர் கமல்நாத்தின் தலைமைக்கு எதிராக அக்கட்சியில் ஒருபிரிவினர் அணிதிரள்கின்றனர்.’’ என சவுகான் கூறினார்.
முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு சவுகான் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |